Others
மாண்டஸ் புயலால் ஆந்திராவில் வெள்ளம்–ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய சென்னை..!
மாமல்லபுரம் அருகே 9ம் தேதி நள்ளிரவு கரையை கடந்த மாண்டஸ் புயலால், ஆந்திராவின் திருப்பதி மாவட்டத்திற்கு உட்பட்ட கே.வி.பி. புரம் பகுதியில் அதிகபட்சமாக 25 சென்டி மீட்டர் மழை பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக காளஹஸ்தி செல்லும் சாலை முழுமையாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. இதேபோல் குண்டூர்-வேங்கடகிரி செல்லும் நெடுஞ்சாலையிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.