மாணவர்கள் பள்ளியிலேயே ஆதார் எண் பெறுவதற்கு புதிய பதிவுகள்…..
iv.இப்பணியினை செவ்வனே மேற்கொள்ள ஏதுவாக பள்ளிக் கல்வித் துறை மற்றும் தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தினரின் பணிகள் மற்றும் பொறுப்புகள் சார்ந்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் (SOP) வகுக்க வேண்டியது அவசியம்.மாணவர்களின் வயதின் 2. பள்ளிகளில் ஆதார் பதிவினை அடிப்படையில் நான்கு நிலைகளில் கீழ்க்கண்டவாறு மேற்கொள்ள ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் தெரிவித்துள்ளார். (i) பள்ளிகளில் ஆதார் பதிவு நிலைகள்:நிலை-1 : 0-5 வயது – புதிய பதிவு:
இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) குழந்தை பதிவு சேர்க்கை கொள்கையின்படி 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பயோமெட்ரிக் பண்புக் கூறுகள் அதாவது. கைரேகை மற்றும் கருவிழி படங்கள் பிடிக்கப்படுவதில்லை. பெற்றோரின் ஆதார் விவரங்கள் மற்றும் கைரேகை அங்கீகாரத்துடன் குழந்தையின் முகம் மட்டும் பதிவு செய்யப்படுகிறது. இவ்வகை புதியப் பதிவுகளை தற்போது பள்ளிகளிலேயே மேற்கொள்ளலாம். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் (ICDS) துறையுடன் இணைந்து இவ்வகையான பதிவினை மேற்கொள்வது சார்ந்த வழிகாட்டு நெறிமுறைகள் தனியாக வெளியிடப்படும்.நிலை 2 : 5-7 வயது வரை கட்டாய பயோமெட்ரிக் பதிவு செய்தல்குழந்தைகள் 5 வயதை அடைந்தவுடன் பயோமெட்ரிக் தகவல்களை (முகம், கைரேகைகள் மற்றும் கருவிழிகள்) கட்டாயம் பதிவு செய்தல் வேண்டும். இவ்வகை பதிவு செய்தல் பணிகளையும் தற்போது பள்ளிகளிலேயே மேற்கொள்ளலாம். மேலும் பதிவுசெய்தலின் போது பிறந்த தேதி, பெயர் முகவரி, அலைபேசி எண் போன்றவற்றில் உள்ள திருத்தங்களையும் எவ்வித கட்டணமுமின்றி மேற்கொள்ளலாம்.
நிலை -3 : 15-17 வயது: கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தல்
குழந்தைகள் 15 வயதை அடைந்த பிறகு மீண்டும் நிலையான பயோமெட்ரிக் தகவல்களை (முகம், கைரேகைகள் மற்றும் கருவிழிகள்) கட்டாயம் புதுப்பிக்க வேண்டும். இவ்வகை புதுப்பித்தல் பணிகளையும் தற்போது பள்ளிகளிலேயே மேற்கொள்ளலாம். மேலும் இப்புதுப்பித்தலின் போது பிறந்த தேதி, பெயர், முகவரி, அலைபேசி எண் போன்றவற்றில் உள்ள திருத்தங்களையும் எவ்வித கட்டணமுமின்றி மேற்கொள்ளலாம்.நிலை4: 7-வயதிற்கு மேற்பட்ட 15-வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான கட்டாய பயோமெட்ரிக் பதிவு செய்தல்
குழந்தைகள் 5 வயதை அடைந்தவுடன் பயோமெட்ரிக் தகவல்களை (முகம், கைரேகைகள் மற்றும் கருவிழிகள்) கட்டாயம் பதிவு செய்தல் வேண்டும். அவ்வாறு 5-முதல் 7-வயது வரை பதிவு செய்யாமலுள்ள 7- வயதிற்கு மேற்பட்ட 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான பயோமெட்ரிக் தகவல்களை பதிவு செய்தல் பணிகளையும் தற்போது பள்ளிகளிலேயே மேற்கொள்ளலாம். மேலும் பதிவுசெய்தலின் போது பிறந்த தேதி, பெயர் முகவரி, அலைபேசி எண் போன்றவற்றில் உள்ள திருத்தங்களையும் எவ்வித கட்டணமுமின்றி மேற்கொள்ளலாம். மேலும், இப்பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு மின்னணு நிறுவனம் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அலுவலர்களுக்கான பணிகள் மற்றும் பொறுப்புகள் சார்ந்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடுமாறு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார். மேற்காண் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் அவர்களின் கருத்துருவினை கவனமுடன் ஆய்வு செய்து அதனை ஏற்று, “பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு” என்ற சிறப்பு முன்னெடுப்பின் கீழ் அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் எண் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அப்பள்ளியிலேயே ஆதார் பெறுவதற்கு புதிய பதிவுகள் மற்றும் ஆதார் எண் புதுப்பித்தல் தொடர்பான பணிகளை தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தினைக் (ELCOT) கொண்டு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் மேற்கொள்ள அனுமதியளித்தும், அப்பணிகளுக்கென தமிழ்நாடு மின்னணு நிறுவனம் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அலுவலர்களுக்கான பணிகள் மற்றும் பொறுப்புகள் சார்ந்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை(Standing Operating Procedure(SOP)) இவ்வாணையின் இணைப்பில் வெளியிட்டும் அரசு ஆணையிடுகிறது.