fbpx
Others

மல்லிகார்ஜுன கார்கே–நாடாளுமன்றத்தில் பேச்சு சுதந்திரம்இல்லை.

 நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் பேச்சு சுதந்திரம் இல்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். பணவிக்கத்தை கட்டுப்படுத்துவோம் என்ற வாக்குறுதியுடன் 2014-ல் பாஜக ஆட்சிக்கு வந்தது. பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் அத்தியாவசியப் பொருட்களின் விலையும், ஏழ்மையும் தான் அதிகரித்துள்ளது என காங்கிரஸ் தலைவர் கார்கே தெரிவித்தார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே இந்த திட்டத்தை தொடங்கி வைத்தபிறகு அந்த பேரணியில் பேசுகையில், பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும், வறுமையும் மட்டுமே உயர்ந்து வருகின்றன என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே குற்றம் சாட்டினார். நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் பேச்சு சுதந்திரம் இல்லை. பேச துணிபவர்கள் கம்பிகளுக்கு பின்னால் தள்ளப்படுகிறார்கள்.
2014ம் ஆண்டு பணவீக்கத்தை குறைப்பதாக வாக்குறுதி அளித்து பாஜக ஆட்சிக்கு வந்தது. நாட்டின் சுதந்திரத்திற்காக காங்கிரஸ் போராடியது. காங்கிரஸ் அரசு நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்தியது. மக்களிடம் வீடு வீடாக சென்று ஒன்றிய அரசின் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவோம். அதன் வாயிலாக ஒன்றிய அரசு மக்களுக்கு எதிராக உள்ளது என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்துவோம் என்றும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Articles

Back to top button
Close
Close