மலேசிய சிலம்ப கழக தலைவராக டாக்டர்.எம். சுரேஷ் தேர்வு….!
மலேசிய சிலம்ப கழக தேசிய நிர்வாகிகளுக்கான தேர்தல் கோலாலம்பூரில் பிரிக் பீல்ட் சில் உள்ள ஒய். எம். சி.ஏ. மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தலைவராக போட்டியிட்ட எம். சுரேஷ் வெற்றி பெற்றார்.மாநில வாரியாக மொத்தம் 76 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதில் 45 வாக்குகள் பெற்ற டாக்டர். சுரேஷ் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் தலைவர் விஸ்வலிங்கம் 31 வாக்குகளை பெற்றார் .துணை தலைவராக சி. மாரிமுத்து.உதவி தலைவராக சி. சரவணன். லூசு லிங்கம் .விவன் கிருஷ்ணன். கமலநாதன். சுந்தரராஜு நாயுடு. ஆகியோர் வெற்றி பெற்றனர். அனைவரும் டாக்டர். சுரேஷ் அணியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தலைமை குழு உறுப்பினர்களாக திலகராஜன். விஜய் சேகரன். விஜயேந்திரன். வசந்தகுமார். ரத்தினம். தினகரன். ரகுபதி. கதிரவன். விஜயேந்திரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர் மோகன்ராஜ், கண்ணன் ஆகியோர் தேர்தல் அதிகாரிகளாக செயல்பட்டு தேர்தலை சிறப்பாக நடத்தி முடித்தனர். வெற்றி பெற்ற தலைவர் டாக்டர்.எம்.சுரேஷுக்கு பல்வேறு சிலம்ப ஆசான்கள் மற்றும் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் வாழ்த்து கூறினர்.