fbpx
RETamil Newsஅரசியல்தமிழ்நாடு

மார்ச் 1-ஆம் தேதி முதல் பிளஸ்-டூ தேர்வுகள் தொடக்கம்!

இந்த ஆண்டு பொது தேர்வான பிளஸ்-டூ தேர்வுகள் மார்ச் 1-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் இது குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் அரசாணை ஒன்று பிறப்பித்துள்ளார். அந்த அரசாணையில் இணை இயக்குனர் அளவில் 19 அதிகாரிகள், 32 மாவட்டங்களுக்கும் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் நாகராஜ் முருகன், ஈரோடு மாவட்டத்திற்கும் , ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குனர் நரேஷ், திருச்சி,அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களுக்கும் , தேர்வுத்துறை என்னை இயக்குனர் சேது ராமவர்மா , கடலூர் மாவட்டத்திற்கும் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவது ஒட்டுமொத்தமாக தேர்வு பணிகளை கண்காணிக்க , மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் கண்ணப்பன், தொடக்க கல்வித்துறை இயக்குனர் கருப்பு சாமி உட்பட 4 இயக்குனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close