மதுரை–நியோமேக்ஸ் நிறுவன மெகா நிதி மோசடி!!!
மதுரையை மையமாகக் கொண்டு பல பெயர்களில், மதுரை, விருதுநகர், தேனி, பி.சி பட்டி, லட்சுமிபுரம், கோவில்பட்டி, திருச்சி, போடிநாயக்கனூர், கம்பம், மற்றும் அனைத்து முக்கிய ஊர்களிலும் நிறுவனங்களுக்கு கவர்ச்சி கரமான கமிஷன்கள் – வெளிநாட்டு இன்ப சுற்றுலாக்கள் என்று பேசி பணக்காரர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பற்றோர் என பல தரப்பட்ட மக்களிடம் ஆசை வார்த்தைகளை கம்பெனி முகவர்கள் மூலம் பல ஆயிரம் கோடியை திரட்டி கடந்த ஆறு மாதங்களாக பயனாளிகளுக்கு நன்றாக கிண்டிய அல்வாக்களை கொடுத்து வருகின்றனர், பணம் செலுத்தியவர்கள் தாங்கள் கம்பெனியில் போட்ட பணத்தை யார் மூலமாக கம்பெனியில் சேர்ந்தனரோ அவர்களை தொந்தரவு செய்ய ஆரம்பித்துவிட்டனர்… இதனால் முகவர்கள் செய்வதறியாது புகார்கள் கொடுக்கவும் தயக்கம் காட்டி வருகின்றனர் இதே நிலை நீடித்தால் பெரிய அளவில் பிரச்சினைகள் , உயிர் சாவுகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது… இவைகள் எல்லாம் நிகழாமல் தடுக்கவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் பணங்கள் கிடைக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்…. தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.