fbpx
Others

மதுரை கிழக்கு, ஸ்ரீ சத்ய சாயி சேவா சமிதி—-சிறப்பு செய்தி

சத்து மாவு வடிவில் சாயி அருள்

பகவானின் 100வது அவதார வைபவத்தை முன்னிட்டு மதுரை கிழக்கு, ஸ்ரீ சத்ய சாயி சேவா சமிதியின் சார்பில் தத்தெடுக்கப்பட்டுள்ள ‘கைத்தறி நகரில்’ அமைந்துள்ள NK குப்பையன் – ரத்னாமணி நர்சரி & பிரைமரி பள்ளியில் பயிலும் 310 மாணவ மாணவிகளுக்கு இன்று 17.03.2023 சாயி பிரசாதமாக சத்து மாவு – சாயி புரோட்டீன் வழங்கப்பட்டது.மாலை 3.00 மணிக்கு சாயி பஜனுடன் நிகழ்ச்சி துவங்கியது. வழங்கப்பட இருந்த சத்து மாவு பொட்டலங்களை பகவானுக்கு பிரம்மார்பண மந்திரம் கூறி சமர்ப்பணம் செய்யப்பட்டது. பின்னர் வரிசையாக அமர்ந்திருந்த குழந்தைகளுக்கு சாயி சேவாதள தொண்டர்கள் மற்றும் பள்ளி ஆசிரியைகள் இணைந்து பக்குவப்படுத்தி அரை கிலோவாக பொட்டலம் போடப்பட்ட சாயி புரோட்டீன் பிரசாத பொட்டலங்களை அன்புடன் வழங்கினர்.இந்நிகழ்ச்சியில் சமிதியில் இருந்து 10 பக்தர்கள் கலந்து கொண்டனர்.பிரசாத விநியோக நிறைவில் பள்ளி நிர்வாகத்தினரால் சாயி புரோட்டீன் தயாரிப்பில் முழுமையாக ஈடுபட்டு, அருமையான சேவை செய்துவரும் திருமதி. மீனாக்ஷி தர்மராஜ் பாண்டியன் அவர்களுக்கு அருளாடை அணிவித்து கௌரவம் செய்யப்பட்டது.  பகவானுக்கு ஆரத்தி எடுத்த பின் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது

Related Articles

Back to top button
Close
Close