fbpx
Others

மதுரை கிழக்குசமிதியின் சார்ப்பில்—ஸ்ரீ சத்ய சாயி விரத கல்ப பூஜை…

விரத_பூர்த்தி  தை பூச நன்னாளில் சாயி ஸ்கந்தனின் அருளாசியுடன் மதுரை கிழக்கு சமிதியின் சார்ப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இன்றைய (05.02.2023) ஸ்ரீ சத்ய சாயி விரத கல்ப பூஜை மிகசிறப்பாக நடைபெற்றது.இந்த ஸ்ரீ சத்ய சாயி நாராயண விரதத்தில் அனைத்து சமிதியில் இருந்தும் 43 பக்தர்கள் கலச ஸ்தாபனம் செய்து கலந்து கொண்டனர். அவர்களோடு மன மண்டபத்தில் சாயி நாதனை ஸ்தாபனம் செய்து பூஜையில் கலந்து கொண்டோர் கிட்டத்தட்ட 50 பக்தர்கள் கலந்து கொண்டனர்.சங்கல்பம், கணபதி பிரார்த்தனை, கலச ஸ்தாபனம், அங்க பூஜை, அர்ச்சனை போன்ற பூர்வாங்க பூஜைகள் அனைத்தும் மதுரை மாவட்ட தலைவர் திரு. R. நாராயணஸ்வாமி அவர்கள் நடத்தி வைத்தார். வட மொழியில் இருக்கும் மந்திர அர்த்தங்கள் மற்றும் சடங்குகளில் உள்ள உண்மையான உள்ளர்த்தம் ஆகியவைகளை விளக்கமாக கூறி பூஜைகளை செய்ய வைத்தது அனைவருக்கும் இறைவனுடன் உன்னதமான உறவை ஏற்படுத்தியதாக அமைந்தது. Rituals, Spiritual – ஆக மேம்பட்டது.பூஜையின் பிரதான பகுதியான 5 கதைகளை 5 மகளிர் வாசிக்க அனைவரும் ஸ்ரவணம் செய்தனர். லீலா காண்டம், மஹிமா காண்டம் தொடங்கி போதனா காண்டம் வரை அனைவராலும் மன ஒருமுனைப்போடு கேட்கப்பட்டது.ஸ்ரவணம் கீர்த்தனம் விஷ்ணு ஸ்மரணம் வந்தனம் போன்று நவ வித பக்தியில் பெரும்பாலான வகைகளை பூர்த்தி செய்யக்கூடிய இந்த விரத கல்பம் இக நலன்களை மட்டுமல்லாது ஆத்ம நிவேதனம் எனும் நிலைக்கும் நம்மை அழைத்து செல்லும் படியாக அமைந்தது.  பெரும்பாலும் புதிய அன்பர்கள் கலந்து கொண்ட விரதம் காலை 10.30 மணிக்கு துவங்கி மதியம் 1.00 வரை நடைபெற்றது.கலந்து கொண்ட மகளிர் அனைவருக்கும் மங்கல வலையல்களும் பகவானின் 2023 நாட்காட்டியும் வழங்கப்பட்டது.கலந்து கொண்ட அனைவருக்கும் பகவானின் அன்ன பிரசாதம் வழங்க, 4 வருடங்களுக்கு பின் நடைபெற்ற பூஜை இனிதே நிறைவடைந்தது..

Related Articles

Back to top button
Close
Close