fbpx
Others

மதுரை காமராசர் பல்கலைக்கழக-திறன் மேம்பாட்டுப் பயிற்சிப் பட்டறை-செய்தி

பழனியில் இயங்கிவரும் மதுரை காமராசர் பல்கலைக்கழக மாலை நேரக் கல்லூரியில், இளங்கலை முதுகலை மாணவர்களுக்கான- திறன் மேம்பாட்டுப் பயிற்சிப் பட்டறை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவில், பழனி மாலை நேரக் கல்லூரியின் இயக்குநர் முனைவர்.தயாளகிகிருஷ்ணன் வரவேற்புரையாற்றினார் . சிறப்பு விருந்தினர்களாக, மதுரை   காமராசர் பல்கலைக்கழகத்தின் சுற்றுலா மற்றும் உணவக மேலாண்மைத் துறைப் பேராசிரியர்கள் முனைவர் பிரவீன்குமார், முனைவர் ராஜேஷ் கண்ணா மற்றும் மதுரைக் கல்லூரியின் ஆங்கிலத்துறைப் பேராசிரியர் முனைவர் சந்திர போஸ், திண்டுக்கல் மாலைநேர கல்லூரியில் இயக்குநர் முனைவர் மேகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு திறன் மேம்பாட்டு பயிற்சியளித்து மாணவர்களுக்கு சிறப்புரையாற்றினர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர். பயிற்சிப் பட்டறையில் பழனி மாலை நேரக் கல்லூரியின் அனைத்துத் துறைசார்ந்த இளங்கலை முதுகலை மாணவர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close