மகாராஷ்டிரா மாநிலம் சிக்னாபூர் சனீஸ்வரன் ஆலயத்தில் சிலம்ப ஆசான்கள் சிறப்பு வழிபாடு
டிசம்பர் மாதம் இருபதாம் தேதி புதன்கிழமை சனி பெயர்ச்சி என்பதால் பல்வேறு ஆலயங்களில் சனி பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
மகாராஷ்டிரா மாநிலம் சிக்னாபூர் சனி பகவானை அகில பாரத சிலம்ப கவுன்சில் தலைவர். ஆர். முருகக்கனி ஆசான். தமிழ்நாடு சிலம்பம் பேரவை தலைவர் .ஜே .ஈசன் ஆசான் இருவரும் வழிபட்டனர்.சிலம்பத்திற்கு ஏற்பட்டுள்ள பல்வேறு சிக்கல்களை தீர்த்து தமிழ்நாடு அரசு சிலம்ப விளையாட்டை நேரடியாக கையில் எடுத்து அதனை சிறப்பாக வளர்த்திட வேண்டும் என்றுவேண்டிக்கொண்டனர். மேலும் விரைவில் தேசிய அளவில் நடத்த இருக்கும் பல மாநிலங்கள் கலந்து கொள்ளும் சிலம்ப போட்டியை சிறப்பாக நடத்தி மத்திய அரசு மற்றும் மாநில அரசு கவனத்தை நமது சிலம்ப கவுன்சில் மற்றும் சிலம்பம் பேரவை இரண்டு அமைப்பும் ஈர்க்கும் வகையிலே போட்டியை நடத்திட சனி பகவான் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டனர்.இவர்களுடன் மகாராஷ்டிரா சிலம்பம் பேரவை தலைவர். பிரவீன் பட்டேல் கலந்து கொண்டார்.