மகளிர் தினத்தையொட்டி முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின்வாழ்த்தினார்கள்
இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஒன்றியம் கீழ் ஆவதம் ஊராட்சியைச் சேர்ந்த திரு.வெங்கடேசன் என்ற விவசாயி தன்னுடைய மூன்று மகள்களை காவல் பணியில் சேர்த்திட கடினமாக உழைத்து அவர்களை ஊக்குவித்து வெற்றியடையச் செய்ததை அறிந்து இன்று (8.3.2023) உலக மகளிர் தினத்தையொட்டி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின் அவர்கள் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு வாழ்த்தினார்கள். மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு.ஆர்.காந்தி அவர்கள் திரு.வெங்கடேசன் என்கிற விவசாயின் வீட்டிற்கு நேரடியாக சென்று வாழ்த்துக்களை தெரிவித்து தன்னுடைய சொந்த பணம் ரூ.1 இலட்சத்தை வழங்கி பாராட்டு தெரிவித்தார்கள். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.வளர்மதி. இ.ஆ.ப., அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.எஸ்.ஜெகத்ரட்சகன் உள்ளனர்.