போரூர்–தமிழ்நாடு சிலம்ப கழக ஆலோசனைக் கூட்டம்.
தமிழ்நாடு சிலம்ப கழக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது! தமிழ்நாடு சிலம்ப கழகத்தின் ஆலோசனை கூட்டம் போரூர் அருகே மௌலிவாக்கத்தில் உள்ள எஸ். வி. எஸ். தங்கும் விடுதி அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கழக தலைவர். டாக்டர். சி. எம். சாமி தலைமை தாங்கினார். கழக பொது செயலாளர்.சிலம்ப ஜாம்பவான்.அகத்தியா. அ. ஞானம் வரவேற்றார்.கழக துணை தலைவர்கள். சிலம்ப கலைமுதுமணி. ஆர் முருககனி. ஜி. கோபால்வாத்தியார்முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் வருகின்ற செப்டம்பர் மாதம் மூன்றாம் தேதி கோவூர் அருகே தண்டலம் மாதா மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடத்த இருக்கும் சிலம்ப சாதனை விழாவிற்கு மாணவர்களை அதிக அளவு அழைத்து வர வேண்டும் . அனைத்து சிலம்ப அமைப்புகளையும் அணுகி இந்த விழாவில் கலந்து கொள்ள செய்ய வேண்டும் .அரசு நம்மை திரும்பி பார்க்கும் அளவிற்கு அந்த விழா அமைய வேண்டும். அதற்குண்டான ஏற்பாடுகளை வேகமாக செய்ய வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.