போதை தொடர்பான விழிப்பு உறுதிமொழி
செங்குன்றம் ஒ.ஆர்.ஜி.என். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நியூஸ் 7 தொலைக்காட்சியின் அன்பு பாலம், சென்னை சோசியல் லயன்ஸ் சங்கம், பாடியநல்லூர், பொன்னேரி, தமிழ் சிங்கம் லயன்ஸ் சங்கங்கள் இணைந்து போதை விழிப்பு உணர்வு நிகழ்வை தலைமையாசிரியர் சுவாமிநாதன் தலைமையில் நடத்தியது.இந்நிகழ்வில் செங்குன்றம் காவல் நிலைய உதவிஆய்வாளர் முருகேசன், சென்னை சோசியல் லயன்ஸ் சங்கத்தின் உடனடி தலைவரும் வட்டாரத் தலைவருமான நண்பன் எம்.முகம்மது அபுபக்கர், இயற்கை பாதுகாப்புக் குழு மாநில அமைப்பாளர் காஜா இப்ராஹீம், மாநிலத் தலைவர் இ.மாரியப்பன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவர்களிடையே போதை தொடர்பான விழிப்பு உணர்வை ஏற்படுத்தினர். உதவி தலைமையாசியர் ஐயப்பன் தொகுத்து வழங்கினார். இதில் பள்ளியின் மாணவர்களும் ஆசிரிய – ஆசிரியைகளும் கலந்து கொண்டு போதை விழிப்பு உணர்வு உறுதிமொழியை ஏற்றனர்.