Others
போதைப் பொருட்களை உற்பத்தி செய்யும் போது இருவர் கைது!
செங்குன்றம் அருகே போதை பொருட்கள் கடத்தி வைத்திருப்பதாக இன்ஸ்பெக்டர் ரமேஷுக்கு ரகசிய தகவல் வந்ததை அடுத்து தனிப்படை போலிசாருடன் கிராண்ட்லைன் ஊராட்சி செல்வ விநாயகர் தெருவில் அதிரடி சோதனை நடத்தியதில் ஒரு வீட்டில் அரசு தடை செய்துள்ள 100 கிலோ ஜர்தாமற்றும் 20 கிலோ மாவா ஆகிய போதை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது.அவைகளை பறிமுதல் செய்த போலீசார் அங்கு இருந்த லோகேஷ் 24 விஜய் பகதூர் 24 என்ற இரண்டு வாலிபர்களை கைது செய்தனர்.போதை பொருட்களை அரைக்க பயன்படுத்தி ய நாலு கிரைண்டர்கள் .மிக்சி ஆகிய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து செங்குன்றம் துணை ஆணையர்மணிவண்ணன்.உதவி ஆணையர். முருகேசன் உத்தரவின் பேரில் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்ட இருவரும் பொன்னேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.