Others
போடி–மாவட்ட நிர்வாகமும், மாவட்ட பொதுப்பணித்துறையும்… கவனிக்குமா….?
போடி மாநகரில் நகர் காவல் நிலையத்திற்கு பின்புறம் அரசு பொது நூலகம் அமைந்துள்ளது. நூலகத்தை நூற்றுக்கணக்கான வாசகர்களும், போட்டித் தேர்வுகளுக்கு படிக்கும் மாணவர்களும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நூலக கட்டிடம் மிகவும் மோசமான நிலையிலும், தகுந்த பராமரிப்பின்றியும் காணப்படுகிறது. மேலும், மாணவ, மாணவியர்களுக்கு கழிப்பறை வசதி இல்லாத காரணத்தினால் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகமும், மாவட்ட பொதுப்பணித்துறையும் உடனடியாகத் தலையிட்டு இப்பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டுமென விதைகள் மக்கள் மேம்பாட்டு அறக்கட்டளையின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
முனைவர்.பொன்.சுப.பாண்டிக்குமார்,
நிறுவனர், விதைகள் மக்கள் மேம்பாட்டு அறக்கட்டளை.