போடி– நிலப்பிரச்சனை–கோஷ்டி மோதல்–7 பேர் மீது வழக்கு
போடி பெரியாண்டவர் ஹைரோடு அய்யனன் தெருவில் குடியிருப்பவர் சுப்பிரமணியன் மகன் ஞான வேலுக்கு சொந்தமாக போடி குரங்கணி சாலையில் இருக்கும் பிச்சாங்கறை. மேலசொக்கநாதர் கோயில் அருகே தோட்டம் உள்ளது..ஞானவேலுக்கு விற்றது போக மீதமுள்ள தோட்டத்தினை வக்கீல் சின்னச்சாமி தந்தை பொன்னான்டியுடன் சேர்ந்து தொட ர்ந்து விவசாயம் செய்து வருகிறார்..இந்த தோட்டத்தில் பாதை, பாகம் மற்றும் நிலம் அளவீடு செய்து பிரிப்பதிலும் ஏற்கனவே முன் விரோத பிரச்சனை இருந்து வருகிறது.. இந்நிலையில் போடி புலவர் காம்பவுண் ட் தெருவை சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் பாண்டியன் இந்த தோட்டத்தில் சில தினங்களுக்கு முன்பாக வேலை செய்து கொண்டிருந்தார்.. இதற்கிடையில் தோட்டத்தை விற்ற பொன்னான்டி, அவரது மகன் சின்னச்சாமி, தம்பி செல்வராஜ், இவருடைய மனைவி ர ஞ்சிதம்,ராஜேந்திரன், ரமேஷ்,கனி உட்ப ட பலரும் சேர்ந்து தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த பாண்டியனை தகாத வார்த்தைகளால் பேசி கொண்டே அத்து மீறி நுழைந்து கம்பு கட்டைகளால் சராமரியாக தாக்கி அங்கு இருந்த முள் வேலி மரம் மற்றும் விளை பயிர்களை அடித்து நொறுக்கி ஒரு லட்சம் பெறுமானமுள்ள பொருட்களை சேதப் படுத்தி விட்டனர்,இதற்கிடையில் ஞானவேல் அதற்கு பதிலாக போடி அருகே முந்தல் குரங்கணி மெயின் ரோட்டை சேர்ந்த வி..எஸ் மணி, மற்றும் பாலார்பட்டி, பெருமாள் கவுண் டன்பட்டியை சேர்ந்த சுமார் 30 திற்கும் மேற்பட்டோர் சின்னச்சாமியின் தோட்ட த்திற்குள் நுழைந்து அவர்களை தாக்கி அங்கு இருந்த டைமன் வலை 200,இரும்பு கேட், பில்லர்கள், ஆங்கிள்கள், விவசாய பயிர்கள் என மூன்று லட்சம் பெறுமானமுள்ள பொருட்களை அடித்து சேதப் படுத்தினர், .CR.NO…54 /2022 dt..22 /11/2022