போடி நகராட்சியில்–அருந்ததியர் இன மக்களை புறக்கணிப்பதாக குற்றச்சாட்டு…?
போடி நகராட்சியில் நகர் மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் கேள்விபதில் அளிக்க முடியாமல்பொறியாளர் திணறல் போடிநகர் மன்றம் அருந்ததியர் இன மக்களை புறக்கணிப்பதாக10 வது வார்டு கவுன்சிலர் ராஜா குற்றச்சாட்டு…? போடி யில் நகராட்சியின் ஒன்பதாவது நகர மன்ற கூட்டம் நகர்மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி தலைமையில் பொறியாளர் செல்வராணி முன்னிலையில் நடைபெற்றது 33 வார்டுகள் கொண்ட போடி நகராட்சியில் இன்று நடைபெற்ற சாதாரண கூட்டத்தில் வார்டு கவுன்சிலர்கள் சரமாரியாக கேள்வி கேட்டனர். அனைத்து வார்டுகளிலும் துப்புரவு பணிகள், கொசு மருந்து, பிளீச்சிங் பவுடர், கொசு புகைசாக்கடை சுத்தம். உள்ளிட்டவை பெரும் தொய்வு உள்ளதாக குற்றச்சாட்டு இருந்தன மேலும் நகராட்சி பகுதிகளில் நாய் மாடு கழுதை குதிரை உள்ளிட்ட விலங்குகள் நகரில் அனைத்து வார்டுகளின் சுற்றி தெரிவதாகவும் இதை பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். மேலும் … போடி நகர் மன்ற கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் நகர மன்ற தலைவரின் கணவர் சங்கர் ,கூட்டம் நடந்து கொண்டிருக்கிற நிலையில் கூட்டம் முடிந்தது என்று எழுந்து கூட்டத்தை முடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது .போடி நகராட்சி எல்லைக்கு உட்பட்ட 22 ஆவது வார்டு பகுதிகளில் ஒரு கோடியே 5 லட்சம் ரூபாய் நிதியில் கட்டப்பட்ட 40 காய்கறி கடைகளை தனி ஒருவருக்கு குத்தகைக்கு விட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவுன்சிலர்கள் நீதிமன்றத்தை அணுகி ஸ்டே வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. நீதிமன்றத்தை அணுகி ஸ்டே ஆர்டர் வாங்கிய வார்டு கவுன்சிலர் தனலட்சுமிக்கு காய்கறி கடை வியாபாரிகள் நன்றி தெரிவித்தனர் அருந்ததியர் இன மக்களை புறக்கணிப்பதாக 10 வது வார்டு கவுன்சிலர் ராஜா குற்றச்சாட்டு .., மேலும் பாதாளசாக்கடை 10 வது வார்டுக்கு பணமும் ஒதுக்கவில்லையா,,? பணியும் செய்யவில்லை .( ராஜா — அருந்ததியர் இன மக்கள் வார்டு என்பதால் செய்யவில்லை என மனவருத்தம் )