போடி சார்பதிவாளர் அலுவலகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் ; 21.10.2022
கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் போடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி லெனின் விடுதலை அமைப்பு சார்பில் போடி சார் பதிவாளர் அலுவலகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
20க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர் போடிதிருவள்ளுவர் திடலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனின் விடுதலை அமைப்பு சார்பில் போடி நகர் சார் பதிவாளர் அலுவலகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆவணங்கள் பதிவு செய்ய லஞ்சம் பெறும் சார் பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்திரப்பதிவு எழுத்தாளர்களை முறையாக அறிவிப்பு பலகை வைத்து பொதுமக்களுக்கு தெரிவிக்ககோரியும் ,முத்திரைத்தாள் விற்பனை ஸ்டாம்பு விற்பனை நடைமுறையில் அதிக கட்டணம் வசூலிப்பதை கண்டித்தும் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தி பதியப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்க கோரியும், போலி ஆவணங்களில் வழியாக பதிவு செய்யப்பட்ட பத்திரங்களை ஆய்வு செய்து ரத்து செய்திடக் கோரியும், மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை பத்திரப்பதிவு அலுவலகத்தில் அடிக்கடி ஆய்வு செய்து அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் போடி நகராட்சிக்கு சொந்தமான சாக்கடை சுடுகாட்டு நிலம் கோவில் நிலம் போன்றவற்றில் போலி ஆவணங்கள் வழியாக தனி நபர்கள் மற்றும் தனி நிறுவனங்கள் பத்திர பதிவு செய்து கொடுக்கப்பட்ட பத்திரங்களை ஆய்வு செய்து ரத்து செய்திடக்கோரியும உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தின் போது போடி பத்திர அலுவலகம் நகராட்சி அலுவலகம் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.