fbpx
Others

போக்குவரத்து காவல்துறை சார்பில்விழிப்புணர்வு கூட்டம்!

செங்குன்றம் காவல் மாவட்ட பகுதிகளில் உள்ள லாரி உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்களுக்கு சாலை விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை விளக்குவதற்கான விழிப்புணர்வு கூட்டம் செங்குன்றம் நெல் அரிசி வியாபாரிகள் சங்க திருமண மண்டபத்தில் நடைபெற்றது.செங்குன்றம் போக்குவரத்து காவல் மாவட்ட உதவி கமிஷனர். மலைச்சாமி தலைமை தாங்கினார் செங்குன்றம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ராஜேஷ் அனைவரையும் வரவேற்றார்.மது அருந்திவிட்டு மற்றும் போதை பொருள் சாப்பிட்டு விட்டு எந்த வாகனத்தையும் ஓட்டக்கூடாது .மேலும் மணல் லாரிகள் டிப்பர் லாரிகள் மணல் எடுத்துச் செல்லும் போது கண்டிப்பாக தார்ப்பாய் மூடி இருக்க வேண்டும். வாகனங்களை வேகமாக ஓட்டக்கூடாது உள்ளிட்ட பல்வேறு சாலை விதிமுறைகளை உதவி கமிஷனர் மலைச்சாமி விளக்கினார். அனைவரும் உறுதிமொழி எடுத்தனர்.டிப்பர் லாரி உரிமையாளர் சங்க தலைவர். காமராஜ்செயலாளார். கிருஷ்ணமூர்த்தி. பொருளாளர். கணேசன் மற்றும் தச்சூர் பாலா. பொன்னேரி ராஜசேகர். பெரியபாளையம் நாகசாமி. மீஞ்சூர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்

Related Articles

Back to top button
Close
Close