Others
பொதுப்பணித்துறைஅமைச்சர். துரைமுருகன்புழல் ஏரியை பார்வையிட்டார்.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரி முழுவதும் நிரம்பியதால் வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.ஏரியில் கரை சேதமடைந்து அணை உடையும் அபாயம் இருப்பதாக சில பத்திரிகையில் செய்தி வந்ததை அடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் பொதுப்பணித்துறை அமைச்சர். துரைமுருகன். பத்திரப்பதிவுத்துறை அமைச்சர். மூர்த்தி மற்றும் திருவள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர். கே. ஜெயக்குமார் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர். எஸ். சுதர்சனம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் புழலேரியை பார்வையிட்டனர். அணை ஏதும் சேதம் அடையவில்லை.பத்திரிகை செய்தி தவறானது உண்மையை வெளியிடுங்கள். மக்களை அச்சப்படுத்தும் செய்திகளை வெளியிட வேண்டாம் என்று அமைச்சர் துரைமுருகன் பத்திரிகையாளர்களை கேட்டுக் கொண்டார்.