Others
பேரறிஞர் அண்ணாவின் 54-வது நினைவு தினம்–மு.க.ஸ்டாலின் மரியாதை
பேரறிஞர் அண்ணாவின் 54-வது நினைவு தினத்தை ஒட்டி மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், பொன்முடி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். பேரறிஞர் அண்ணாவின் 54-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா சிலை அருகில் தொடங்கி மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் வரை அமைதி பேரணி நடைபெற்றது.
அமைதி பேரணியை அடுத்து மெரினாவில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், பொன்முடி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.