Others
பெரியகுளம் — ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிபாட புத்தகம் வழங்கும்நிகழ்வு
பெரியகுளம்: ஜுன் : 16 தேனி மாவட்டம் பெரியகுளம் கீழவடகரை ஊராட்சிக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் பள்ளி திறந்த நாளை ஒட்டி பள்ளி மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக கீழவடகரை ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணி செல்வராஜ் தலைமையில், நூலகம் வாசகர் வட்ட தலைவர் மோகன், ஊராட்சி மன்ற துணை தலைவர் ராஜசேகர், ஊராட்சி செயலாளர் ஜெயபாண்டி,வார்டு கவுன்சிலர் கனகவள்ளி துரைப்பாண்டி,கவுன்சிலர் செல்வேந்திரன் ஆகியோர் இணைந்து பள்ளி மாணவ மாணவிகள் அனைவருக்கும் எழுதுகோள், வாய்பாடு, உபகரணங்கள் வழங்கினார்கள். உடன் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜலக்ஷ்மி,ஆசிரியர் கலைவாணி உடனிருந்தனர்.