fbpx
Others

பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய கூட்டம்— செய்தி

தேனி, செப்.12. தேனி மாவட்டம், பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு, ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் தங்கவேல் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சேகரன், ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், ஒன்றிய கவுன்சிலர்கள் ஆண்டி, ஈஸ்வரன், சண்முகவள்ளி, சரவணன், சாந்தி ,பாண்டியன், செல்வம், தேவர் லிங்கம்மாள் சேகர் , ராசு, பாண்டியம்மாள் பாலு, பாலசுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் உள்ள பொதுமக்கள் குறைபாடுகளை எடுத்து முன் வைத்தனர். ஒன்றிய கவுன்சிலர்களின் கோரிக்கைகளை ஒன்றிய குழு பெருந்தலைவர் தங்கவேலு நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். நிகழ்ச்சியின் நிறைவாக , ஒன்றிய குழு துணை தலைவர் மருதையம்மாள் சாஸ்தா நன்றியுரை ஆற்றினார்   

 

Related Articles

Back to top button
Close
Close