பெரியகுளம்சுற்றுச்சூழல்விழிப்புணர்வு பேரணி-தேனி
தேனி மாவட்டம்.ஜூன்.21. பெரியகுளத்தில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவர்கள் உலக சுற்றுச்சூழல் தின விழா விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.
இந்த பேரணியின் போது உலக சுற்றுச்சூழலை பாதுகாக்க, மரம் வளர்ப்போம் மழை பெறுவோம், நெகிழியை தவிர்ப்போம், உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு பெரியகுளம் தென்கரை காந்தி சிலை முன்பாக பேரணியை துவங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக வந்து பெரியகுளம் வடகரை புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலை முன்பாக பேரணியை நிறைவு செய்தனர்.மேலும் இந்தப்பேரணியின் முடிவில் கால்நடை மருத்துவ கல்லூரி மாணவர்கள் மற்றும் மருத்துவக்கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், ஒன்றிணைந்து நெகிழிப் பைகளை ஒழிப்பது மரங்கள் வளர்ப்பது சுற்றுச்சழலை பாதுகாப்பதற்கான உறுதிமொழியை ஏற்று விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.இந்தப் பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் கல்லூரி முதல்வர் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.