fbpx
Others

புழல்- வடபெரும்பாக்கம் இணைப்பு பாலம் ஆமை வேகத்தில்பணி நடைபெறுகிறது…?

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட புழல்- வடபெரும் பாக்கம் இடையே புழலேரி உபரி நீர் கால்வாய் செல்லும் பகுதியில் கதிர்வேடு. புத்தகரம். மணலி. மாதவரம் உள்ளிட்ட பகுதியிலிருந்து பொதுமக்கள் வாகனங்களில் வேலைக்கும் மற்றும் பள்ளி மாணவர்கள் பள்ளிக்கும் செல்கின்றனர்.இந்த கால்வாய் இருபுறமும் இணைக்கும் பாலம் சென்னை மாநகராட்சி பாலங்கள் துறை சார்பில் இரண்டு வருடங்களுக்கு முன்பு ரூபாய் 14 கோடியில் தொடங்கப்பட்டது. அதன் பணி முடிவடையாததால் பொதுமக்கள்., வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள். இந்த பாலப்பணியை விரைவாக முடித்து தர வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close