fbpx
Others

புழல் மத்திய சிறை-மருத்துவ தாவரங்களின் இயற்கை நாற்றுப் பண்ணை

புழல் மத்திய சிறையில் மருத்துவ தாவரங்களின் இயற்கை நாற்றுப் பண்ணை திறந்துவைக்கப்பட்டது.  ▪️சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை இயக்குநர் அறிவுறுத்தலின்படி புழல் சிறைச்சாலையில் மருத்துவ மூலிகைகள் / தாவரங்களின் நாற்றுப் பண்ணை திறக்கப்பட்டுள்ளது.▪️பல மருத்துவ குணங்கள் கொண்ட இந்த நாற்றுப் பண்ணை சிறைவாசிகளால் பராமரிக்கப்படும்.▪️இரசாயன உரங்கள் அல்லது பூச்சிக்கொல்லிகள் இந்நாற்றுப் பண்ணையில் பயன்படுத்தப்படமாட்டாது.
▪️செடிகளின் விரைவான வளர்ச்சிக்காக நாற்றுப் பண்ணையில் பசுமை இல்லமும் வழங்கப்பட்டுள்ளது.▪️மூலிகைகள் சந்தையில் விற்கப்பட்டு அதில் கிடைக்கும் லாபம் சிறைவாசிகளின் நலனுக்காக பயன்படுத்தப்படும்.▪️ சிறைத்துறை இயக்குநர். அமரேஷ் பூஜாரி, ஐபிஎஸ் இந்நாற்றுப்பண்ணையை ஆய்வு செய்து இதனை பராமரிக்கும் சிறைவாசிகளுடன் கலந்துரையாடினார்.▪️ டிஐஜி.முருகேசன், கண்காணிப்பாளர் நிகிலா நாகேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்..

Related Articles

Back to top button
Close
Close