fbpx
Others

புழல் பகுதிகளில் காணமல் போன தெருக்களின் பெயர் பலகைகள்…..

புழல் கதிர்வேடு சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள தெருக்களின் பெயர் பலகைகளை புதுப்பிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாதவரம் மண்டலம் 23, 24, 31, 32, 33 ஆகிய வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளான புழல் காவாங்கரை, கண்ணப்ப சாமி நகர், சக்திவேல் நகர், பாலாஜி நகர், புனித அந்தோணியார் நகர், அண்ணா நினைவு நகர், கதிர்வேடு எம்ஜிஆர் நகர், கலெக்டர் நகர், பத்மாவதி நகர், லட்சுமிபுரம், ரெட்டேரி விநாயகபுரம், புத்தகரம் சூரப்பட்டு, உள்ளிட்ட பகுதிகளில் தெருக்களின் பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.இவை மாநகராட்சி சார்பில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு வைக்கப்பட்டு இருந்தன. தற்போது மேற்கண்ட பகுதிகளில் உள்ள தெருப் பலகைகள் உடைந்து கிடக்கின்றன. பெரும்பாலான பெயர் பலகைகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதனால் வெளியூரில் இருந்து வரும் பொதுமக்களும், குறிப்பாக தபால் ஊழியர்களும் தெருக்களின் பெயர் தெரியாமல் திணறி வருகின்றனர்.இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாநகராட்சி கவுன்சிலர்கள் பலமுறை மாதவரம் மண்டல அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் புதிய பெயர் பலகைகள் அமைக்கப்படாமல் உள்ளன. பெயர் பலகைகளின் மீது போஸ்டர் ஒட்டுபவர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உடைந்த நிலையில் உள்ள பெயர் பலகைகளை புதுப்பிக்க மாதவரம் மண்டல அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close