fbpx
Others

புழல்கதிர்வேடு 31வது வார்டு மாபெரும் இலவச இருதய, கண்/பொது மருத்துவம்

 புழல் கதிர்வேட்டில் 31 வது மாமன்ற உறுப்பினர் சங்கீதா பாபு ஏற்ப்பாட்டில் இலவச இருதய – கண் பரிசோதனை, பொது மருத்துவ முகாம்..சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலம் 31 வது வார்டுக்கு உட்பட்ட புழல் கதிர்வேடு பகுதியில் மாபெரும் இலவச இருதய, கண் பரிசோதனை, பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.சென்னை பெருமாநகராட்சி 31வது வார்டு மாமன்ற உறுப்பினர் சங்கீதா பாபு, சமூக சேவகர் பாபு ஆகியோர் ஏற்ப்பாட்டில் சென்னை சோசியல் லயன்ஸ் சங்கம், பிரசாந்த் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை, எழில் டயாபட்டிக் சென்டர் இணைந்து நடத்திய மருத்துவ முகாமில் இருதய பரிசோதனை, இரத்தத்தில சர்க்கரை அளவு, கொழுப்பு அளவு, உயரம் எடை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் சிறந்த மருத்துவ குழுவினரால் மருத்துவம் பார்க்கப்பட்டு ஆலோசனைகள் வழங்கி இலவசமாக மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.முன்னதாக சென்னை சோசியல் லயன்ஸ் சங்க உடனடி தலைவரும் வட்டாரத் தலைவருமான நண்பன் எம்.முகம்மது அபுபக்கர் அனைவரையும் வரவேற்றார்.மாதவரம் மண்டல குழு தலைவர் நந்தகோபால், காங்கிரஸ் கட்சியின் திருவள்ளூர் தெற்கு மாவட்ட தலைவர் திருவேற்காடு டி.ரமேஷ், பெருநகர சென்னை மாநகராட்சி 23 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ராஜன் பர்ணபாஸ், மாதவரம் தெற்கு பகுதி திமுக செயலாளர் ஜி.துக்காராம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மருத்துவமனை முகாமை துவக்கி வைத்து, இலவச கண் கண்ணாடிகளை வழங்கினர். இதில் 125க்கும் மேற்பட்டோர் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.சென்னை சோசியல் லயன்ஸ் சங்க பொருளாளர் பயாஸ் உசேன், உறுப்பினர் சேர்க்கை இயக்குநர் கோகுல் எஸ்.வைதீஸ்வரன் உள்ளிட்ட காங்கிரஸ், திமுக கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close