fbpx
Others

புள்ளிலையின் ஊராட்சியில் ரூபாய் 5 கோடி மதிப்பு அரசு நிலம் மீட்பு !

புள்ளிலையின் ஊராட்சியில் தனியார் ஆக்கிரமித்த ரூபாய் 5 கோடி மதிப்பிலான அரசு நிலம் மீட்பு!மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை!!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா புள்ளிலையன் ஊராட்சி ஆருண் உல்லாச நகரில் ரூபாய் 5 கோடி மதிப்பிலான அரசு நிலம் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த தகவல் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு  தெரிவிக்கப்பட்டது. அதனையடுத்து மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில் 5 கோடி மதிப்புள்ள அரசு நிலம் அதிரடியாக மீட்கப்பட்டது. பொன்னேரி வட்டாட்சியர் செல்வகுமார் . துணை வட்டாட்சியர் சிவகுமார். செங்குன்றம் வருவாய் ஆய்வாளர் தனபால். புள்ளிலயன் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ் செல்வி ரமேஷ் ஆகியோர் முன்னிலையில் ஆக்கிரமிப்பு பகுதியை நில அளவையாளர் குமார் கிராம நிர்வாக அலுவலர்கள். கார்த்திக். கார்த்திகா. பரமேஸ்வரி ஆகியோர் ஜேசிபி எந்திரம் மூலம் சுற்றுச் சுவரை இடித்து அரசு நிலத்தை மீட்டனர். சமூக சேவகர் ரமேஷ். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மாதவன்.ஊராட்சி உதவியாளர்கள் குமார் . முருகன். ஜெகதீஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Articles

Back to top button
Close
Close