fbpx
Others

புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி ராஜீவ்காந்தி சிலைக்கு மாலை அணிவித்தார்

 புதுச்சேரி . முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் பிறந்தநாள் விழா புதுவை அரசு சார்பில் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி 100 அடி ரோட்டில் உள்ள ராஜீவ்காந்தி சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து சர்வமத பிரார்த்தனை, தேசபக்தி பாடல்கள் இடம்பெற்றன. பின்னர்ராஜீவ்காந்தி சிலைக்கு ரங்கசாமி மரியாதை முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் ஒருமைப்பாட்டு உறுதிமொழிஎடுத்துக்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியில் அமைச்சர் லட்சுமிநாராயணன், துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஏ.கே.டி.ஆறுமுகம், எம்.எல்.ஏ.க்கள் பாஸ்கர், லட்சுமிகாந்தன், செய்தித்துறை இயக்குனர் தமிழ்ச்செல்வன் உள்பட பலர் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினார்கள். காங்கிரஸ் மாநில  தலைவர்ஏ.வி.சுப்ரமணியன் தலைமையில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். முன்னதாக காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ராஜீவ்காந்தியின் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செய்தனர். நிகழ்ச்சியில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி., வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் நீல.கங்காதரன், அனந்தராமன், கார்த்திகேயன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close