இது ஆணவக் கொலையல்ல, கூலிப்படை கொலையா? உடுமலை சங்கர் சம்பவம் விவகாரம் குறித்து உதயநிதி!
Udhayniti stalin twitter about udumalai Shankar
சென்னை:
உடுமலை சங்கர் படுகொலை ஆணவக் கொலையல்ல, கூலிப்படை கொலையா? என்று உதயநிதி ஸ்டாலின் டுவிட்டரில் முக்கிய பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
உடுமலைபேட்டை சங்கர் படுகொலை தமிழகம் மறக்காத சம்பவம். இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 5 பேரின் தண்டனையை ஆயுள் தண்டனையாக உயர்நீதிமன்றம் குறைத்தது.
முக்கியக் குற்றவாளியான கௌசல்யா தந்தை சின்னசாமி விடுவிக்கப்பட்டு உள்ளார். இந் நிலையில் திமுக இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து கூறியுள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது: உடுமலைப்பேட்டை சங்கரின் ஆணவக் கொலைவழக்கின் மேல்முறையீட்டில் கவுசல்யாவின் தந்தையை விடுவித்தும், மற்ற ஐவரின் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தும், தாய்-தாய்மாமா உள்ளிட்ட மூவரின் விடுதலையை உறுதி செய்தும் காவல்துறை மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம் என்று கூறி உள்ளார்.
மற்றொரு பதிவில் கூறியதாவது: கவுசல்யாவின் தந்தை, தாய், தாய்மாமா பாண்டித்துரை மூவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். அப்படியெனில் இது ஆணவக் கொலையல்ல, கூலிப்படை கொலையா’ என்ற கேள்விக்கு பட்டபகலில் பலரின் முன்னால் நடந்த கொலை வழக்கைச் சரியான ஆதாரம், சாட்சியங்களுடன் நடத்தாத அரசே பதிலளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.