fbpx
GeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு

இது ஆணவக் கொலையல்ல, கூலிப்படை கொலையா? உடுமலை சங்கர் சம்பவம் விவகாரம் குறித்து உதயநிதி!

Udhayniti stalin twitter about udumalai Shankar

சென்னை:

உடுமலை சங்கர் படுகொலை ஆணவக் கொலையல்ல, கூலிப்படை கொலையா? என்று உதயநிதி ஸ்டாலின் டுவிட்டரில் முக்கிய பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

உடுமலைபேட்டை சங்கர் படுகொலை தமிழகம் மறக்காத சம்பவம். இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 5 பேரின் தண்டனையை ஆயுள் தண்டனையாக உயர்நீதிமன்றம் குறைத்தது.

முக்கியக் குற்றவாளியான கௌசல்யா தந்தை சின்னசாமி  விடுவிக்கப்பட்டு உள்ளார். இந் நிலையில் திமுக இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து கூறியுள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது: உடுமலைப்பேட்டை சங்கரின் ஆணவக் கொலைவழக்கின் மேல்முறையீட்டில் கவுசல்யாவின் தந்தையை விடுவித்தும், மற்ற ஐவரின் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தும், தாய்-தாய்மாமா உள்ளிட்ட மூவரின் விடுதலையை உறுதி செய்தும் காவல்துறை மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம் என்று கூறி உள்ளார்.

மற்றொரு பதிவில் கூறியதாவது: கவுசல்யாவின் தந்தை, தாய், தாய்மாமா பாண்டித்துரை மூவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். அப்படியெனில் இது ஆணவக் கொலையல்ல, கூலிப்படை கொலையா’ என்ற கேள்விக்கு பட்டபகலில் பலரின் முன்னால் நடந்த கொலை வழக்கைச் சரியான ஆதாரம், சாட்சியங்களுடன் நடத்தாத அரசே பதிலளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close