Others
புதுச்சேரிகவர்னரிடம்பா.ஜ.கட்சினா்கோரிக்கை
மக்கள் நல திட்டங்களை விரைவாக செயல்படுத்த வேண்டும் என கவர்னரிடம், பா.ஜ.கட்சினா் வலியுறுத்தினா். புதுச்சேரி கவர்னர் மாளிகையில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை, மாநில பா.ஜ.க. தலைவர் சாமிநாதன் தலைமையில் அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் சரவணன் குமார், செல்வகணபதி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்ட், அசோக் பாபு, கோலப்பள்ளி ஸ்ரீனிவாச அசோக் ஆகியோர் சந்தித்தனர். அப்போது கவர்னரிடம், பிரதமர் மோடியின் பல்வேறு தொழில் வளர்ச்சி திட்டங்கள், மக்கள் நல திட்டங்களை விரைவாக செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.