ChennaiRETamil NewsTrending Nowஅரசியல்தமிழ்நாடு
ஆர்.எஸ், பாரதி அதிகாலையில் அதிரடி கைது…! வன்கொடுமை சட்டப்பிரிவுகளில் வழக்கு
DMK MP RS bharati arrested
சென்னை: திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ் பாரதியை போலீசார் இன்று அதிகாலை கைது செய்தனர்.
ஆலந்தூரில் உள்ள ஆர்.எஸ் பாரதி வீட்டிற்குச் சென்று போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிப்ரவரி 15ம் தேதி திமுக இளைஞரணி சார்பில் அன்பகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து ஆர்.எஸ் பாரதி பேசியது சர்ச்சையை கிளப்பியது.
இது தொடர்பாக ஆதித்தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண் சுந்தரம் என்பவர் ஆர்.எஸ் பாரதி மீது புகார் அளித்திருந்தார். இதனைத்தொடர்ந்து தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டத்தின் 2 பிரிவுகளின் கீழ் ஆர்.எஸ் பாரதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந் நிலையில், மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் தலைமையிலான போலீசார், ஆர்.எஸ் பாரதியை இன்று அதிகாலை கைது செய்தனர்.