fbpx
RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு

இன்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் ; தமிழகம்-கேரளா இடையே போக்குவரத்தும் நிறுத்தம்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டு வருவதை கண்டிக்கும் வகையில் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் இன்று நடைபெறுகின்றது. இதையொட்டி தமிழகத்திலிருந்து கேரளா, மற்றும் கர்நாடக செல்லும் அரசு பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

எண்ணெய் நிறுவனங்கள் மாதம் இரு முறை மட்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைத்து வந்தன. இந்த முறை சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்த முறை கைவிடப்பட்டு. தினம்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை பின்பற்றப்பட்டது. இதன் மூலம் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இந்த முறையை எதிர்க்கும் வகையிலும், பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதை கண்டிக்கும் வகையிலும் , மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை மாற்றி அமைக்க கோரியும் நாடு முழுவதிலும் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகின்றது. இந்த போராட்டத்திற்கு பல்வேறு
பட்ட கட்சிகளும் ஆதரவு தெறிவித்துள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close