பிரதமர் மோடி இன்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
-
சென்னையில்இருந்து கோவை செல்லும் அதிவிரைவு ரயிலான வந்தே பாரத் ரயிலைப் பிரதமர் மோடி இன்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக இன்று சென்னை வந்துள்ளார். மதியம் 2.45 மணிக்கு ஹைதராபாத்தில் இருந்து தனி விமான மூலம் சென்னை விமான நிலையம் வந்து அடைந்தார். அதனைத் தொடர்ந்து, விமான நிலையத்தில் ஒருங்கிணைந்த புதிய முனையத்தைத் திறந்து வைத்துப் பார்வையிட்டார். இந்த திறப்பு விழாவில் மத்திய அமைச்சர் ஜோதிராத்திய சிந்தியா, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றனர். இதனைத்தொடர்ந்து, சென்னை ஐஎன்எஸ் அடையாருக்கு ஹைலிகாப்பர் மூலம் இறங்கி, சாலை மார்க்கமாகச் சென்னை எம்.ஜி.ஆர் சென்ரல் ரயில் நிலையத்திற்கு வந்தார்.சென்னை எம்.ஜி.ஆர் சென்ரல் ரயில் நிலையத்தில், தமிழ்நாட்டில் செல்லும் முதல் வந்தே பாரத் ரயில் சேவையைப் பிரதமர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். சென்னையில் இருந்து புறப்படும் இந்த ரயில், 495.28 கி.மீ தூரத்தை 5 மணிநேரம் 50 நிமிடங்களில் சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழித்தடத்தில் உள்ள திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனவும் கூறப்படுகிறது.