fbpx
Others

பிரதமர் நரேந்திரமோடி- திண்டுக்கல்-பாலக்காடு ரெயில் மின்பாதைதிறப்பு

திண்டுக்கல்-பாலக்காடுதிண்டுக்கல்-பாலக்காடு இடையே 179 கி.மீ. தூர ரெயில் மின்பாதை; பிரதமர் நரேந்திரமோடி இன்று திறந்து வைக்கிறார் மின்பாதை கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல் வழியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு ரெயில்கள் இயக்கப்பட்டுவருகின்றன . அதன்படி சென்னை-பாலக்காடு அதிவிரைவு ரெயில், அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில், பாசஞ்சர் ரெயில்கள் மற்றும் பல்வேறு சரக்கு ரெயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பாதையில் டீசல் என்ஜின் ரெயில்களே இயக்கப்பட்டு வந்தன.  இந்த நிலையில் திண்டுக்கல்-பாலக்காடு இடையேயான 179 கி.மீ. தூர ரெயில் பாதையை, மின்பாதையாக மாற்றும் பணி நடைபெற்றது. மேலும் திண்டுக்கல்-பழனி, பழனி-பொள்ளாச்சி, பொள்ளாச்சி-பாலக்காடு என 3 கட்டங்களாக மின்மயமாக்கல் பணிகள் நடைபெற்றன. அதில் திண்டுக்கல்-பழனி, பழனி-பொள்ளாச்சி இடையே மின்மயமாக்கல் பணிகள் ஏற்கனவே நிறைவுபெற்றுவிட்டன. பிரதமர் திறந்து வைக்கிறார் அதையடுத்து பொள்ளாச்சி-பாலக்காடு இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு மின்மயமாக்கல் பணி முடிந்தது. அதோடு திண்டுக்கல்-பாலக்காடு இடையே 179 கி.மீ. தூர ரெயில் மின்பாதையில் ரெயில் சோதனை ஓட்டம் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. இதைத் தொடர்ந்து திண்டுக்கல்-பாலக்காடு ரெயில் மின்பாதையை திறந்து வைக்கும் நிகழ்ச்சி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு நடக்கிறது.பிரதமர்நரேந்திரமோடிதிருவனந்தபுரத்தில்  நடைபெறும் விழாவில் இருந்தபடி காணொலிக்காட்சி மூலம் திண்டுக்கல்-பாலக்காடு ரெயில் மின்பாதையை திறந்து வைத்து, நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இதையொட்டி திண்டுக்கல், பழனி, பாலக்காடு ரெயில் நிலையங்களில் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அதில் முக்கிய பிரமுகர்கள், ரெயில்வே அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

Related Articles

Back to top button
Close
Close