பிரதமரின்’மனதின் குரல்’ 100-வது நிகழ்ச்சி-காங்கிரஸ்சாடல்
பிரதமர் மோடி பதவிக்கு வந்த காலம்தொட்டு ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று அகில இந்திய வானொலியில் ‘மன்கிபாத்’ என்னும் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி வாயிலாக நாட்டு மக்களுடன் பேசி வருகிறார். இந்த ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி, 100-வது வாரத்தை எட்டியுள்ளது. 100-வது நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை ஒலிபரப்பாகிறது. இதையொட்டி காங்கிரஸ் கட்சி சாடி உள்ளதுஅந்தக்கட்சியின்பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:- 30-ந்தேதியன்று ஒலிபரப்பாகும் ‘மனதின் குரல்’ 100-வது நிகழ்ச்சிக்காக பிரதமரின் வல்லமைமிக்க மக்கள் தொடர்பு எந்திரம், கடுமையாக உழைத்து வருகிறது. ஆனால் அதானி நிறுவனங்கள் விவகாரம், சீன எல்லைப்பிரச்சினை, புல்வாமா-பாலக்கோட் தாக்குதல் பற்றிய காஷ்மீர் முன்னாள் கவர்னர் சத்யபால் மாலிக் வெளியிட்ட தகவவல்கள், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் சீர்குலைவு உள்ளிட்ட முக்கியமான பிரச்சினைகள் குறித்து பேசாவிட்டால் அது மவுனமான குரல்தான் என்று அதில் கூறப்பட்டுள்ளது.