fbpx
Others

பிரதமரின்’மனதின் குரல்’ 100-வது நிகழ்ச்சி-காங்கிரஸ்சாடல்

பிரதமர் மோடி பதவிக்கு வந்த காலம்தொட்டு ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று அகில இந்திய வானொலியில் ‘மன்கிபாத்’ என்னும் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி வாயிலாக நாட்டு மக்களுடன் பேசி வருகிறார்.   இந்தமனதின் குரல் 100-வது நிகழ்ச்சி : காங்கிரஸ் கட்சி கடும் சாடல் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி, 100-வது வாரத்தை எட்டியுள்ளது. 100-வது நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை ஒலிபரப்பாகிறது. இதையொட்டி காங்கிரஸ் கட்சி சாடி உள்ளதுஅந்தக்கட்சியின்பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:- 30-ந்தேதியன்று ஒலிபரப்பாகும் ‘மனதின் குரல்’ 100-வது நிகழ்ச்சிக்காக பிரதமரின் வல்லமைமிக்க மக்கள் தொடர்பு எந்திரம், கடுமையாக உழைத்து வருகிறது. ஆனால் அதானி நிறுவனங்கள் விவகாரம், சீன எல்லைப்பிரச்சினை, புல்வாமா-பாலக்கோட் தாக்குதல் பற்றிய காஷ்மீர் முன்னாள் கவர்னர் சத்யபால் மாலிக் வெளியிட்ட தகவவல்கள், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் சீர்குலைவு உள்ளிட்ட முக்கியமான பிரச்சினைகள் குறித்து பேசாவிட்டால் அது மவுனமான குரல்தான் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close