Others
பாலாஜி கார்டன் நியாய விலை கடையில் நடப்பது என்ன…?
சைதாப்பேட்டை வேளாண் கூட்டுறவு சங்கத்தின் சார்பில் செயல்படுகின்ற திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம் புள்ளி லயன் ஊராட்சியில் பாலாஜி கார்டன் பகுதியில் உள்ள நியாய விலை கடையில் பொருட்கள் எல்லாம் இருந்தால் மிஷின் வேலை செய்யவில்லை. மெஷின் வேலை செய்தால் எடை போட்டு பொருட்களை தருபவர் வருவதில்லை. எல்லாமே சரியாக இருந்தால் மின்சாரம் இல்லை . என்று சொல்லி மாதம் முழுவதும் பெண்களை அலையவிடும் நியாய விலை கடையாக இருக்கின்றது.இந்த கடையில் பில் போடுபவர் புது ஆளாக இருக்கிறார்.இந்த கடையில் ஒரு பெண்மணி தான் பில் போடுவார்கள் என்று அதிகாரிகள் சொல்கிறார்கள்.ஆனால் அந்தப் பெண்மணி இந்த கடைக்கே வருவது இல்லை.பொருட்கள் சரியான விநியோகம் இல்லை.பெண்களை அலைய வைக்கின்றார்கள். உடனடியாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.