fbpx
Others

பாரதிய ஜனதா மாநில தலைவர் கே. அண்ணாமலை பாதிக்கப்பட்ட 350 பேருக்குநேரில் வழங்கினார்.

வடகிழக்குபருவமழை மற்றும் எக்ஜாம் புயல் காரணமாக செங்குன்றம் புழலேரி கரை பகுதியில் பாதிக்கப்பட்ட 350 பேருக்கு அரிசி.ரொட்டி. புடவை போன்ற அத்தியாவசிய பொருட்களை பாரதிய ஜனதா மாநில தலைவர்
கே. அண்ணாமலை நேரில் வழங்கினார். துணைத்தலைவர் கரு . நாகராஜன் துணைத் தலைவர் சக்கரவர்த்தி விழுப்புரம் மண்டல தலைவர் .வினோஜ் பி .செல்வம் மாநில ஓ.பி.சி. அணி தலைவர். கே .ஆர். வெங்கடேசன் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர். நரேஷ் குமார். புழல் மண்டல தலைவர் முரளி கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு அரசு மழை வெள்ள தடுப்பு முயற்சியில் மக்களை பாதுகாக்க தவறிவிட்டது. அமைச்சர்களும். அதிகாரிகளும் மக்களை நேரில் சந்திக்க தயங்குகின்றனர்.விரைவாக மக்களை மழை வெள்ள இடர்பாடுகளில் இருந்து மீட்க வேண்டியது அரசின் கடமை அதை வேகமாக செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். என்று நிருபர்களிடம் தலைவர் அண்ணாமலை கூறினார்.

Related Articles

Back to top button
Close
Close