fbpx
Others

பாரதியார் நினைவு நாளில்மணிமண்டபம் மூடல்– பொதுமக்கள்ஏமாற்றம்

. அரியாங்குப்பம் புதுச்சேரி மாநிலத்தில் பாரதியாரின் நினைவு தினம்நினைவு நாளியல் மூடப்பட்ட பாரதியார் மணிமண்டபம் அனுசரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தல், நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அரியாங்குப்பம் பாரதியார் பல்கலைக்கூடத்தில் பாரதியாருக்கு மணிமண்டபம் உள்ளது. அந்த மணிமண்டத்தில் எவ்வித நிகழ்ச்சிகளும் நேற்று நடைபெறவில்லை. மாறாக நேற்று மணிமண்டபம் மூடப்பட்டிருந்தது. ஏராளமான பொதுமக்கள், தமிழ் ஆர்வலர்களும், ஆசிரியர்களும் மணிமண்டபத்திற்கு சென்று அஞ்சலி செலுத்த முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதுகுறித்து பல்கலைக்கூட நிர்வாகத்திடம் கேட்டபோது, சிலைக்கு மாலை அணிவித்த உடனே மணிமண்டபத்தை மூடிவிட்டோம்’ என்றனர். புதுச்சேரி மாநிலத்தில் அரியாங்குப்பத்தில் மட்டுமே பாரதியாருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாரதியாரின் நினைவு நாளான நேற்று அந்த மணி மண்டபத்தில் எவ்வித நிகழ்ச்சிகளும் நடைபெறாமல் மூடப்பட்டிருந்தது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இனி வரும் காலங்களில் பாரதியாரின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாளில் இந்த மணிமண்டபத்தில் நிகழ்ச்சிகள் நடத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close