பாபரி மஸ்ஜித் இடிப்பு தினம் ‘பாசிச எதிர்ப்பு தினம்’ ( டிச.06 )
டிச.06 பாபரி மஸ்ஜித் இடிப்பு தினம் ‘பாசிச எதிர்ப்பு தினம்’
“தென் சென்னையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி நடத்திய மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்!”சென்னையில் தென் சென்னை மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக மாவட்ட தலைவர் பிலால் தலைமையில் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட எஸ்.டி.பி.ஐ. மாநில செயலாளர் ஏ.கே.கரீம்,மே 17 ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார்,இந்திய குடியரசு கட்சி மாநில பொறுப்பாளர் இரா.அன்புவேந்தன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.வழிபாட்டுத் தலங்கள் சட்டம்-1991 ஐ வலுவாக அமல்படுத்தி அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் ஒன்றிய, மாநில அரசுகளும், நீதித்துறையும் பாதுகாக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.