Others
பாடியநல்லூர்–சக்திவேல் முருகன் ஆலயத்தில் ஆடி கிருத்திகை திருவிழா
பாடியநல்லூர் அருள்மிகு சக்திவேல் முருகன் ஆலயத்தில் ஆடி கிருத்திகை திருவிழா சிறப்பாக நடைபெற்றது.திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பாடியநல்லூர் ஊராட்சி பகுதியில் உள்ள அருள்மிகு வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சக்திவேல் முருகன் ஆலயத்தில் ஆடி கிருத்திகை திருவிழா சிறப்பாக நடைபெற்றது .ஆலய ஸ்தாபகர். டாக்டர். பண்ணைபி. கணேசன் அவர்கள் தலைமையில் முருகனுக்கு அபிஷேகம். அலங்காரமும் சிறப்பாக நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன .சுற்று பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் இந்த ஆடி கிருத்திகை திருவிழாவிலே கலந்து கொண்டு முருகப்பெருமானின் அருளை பெற்றனர்.