fbpx
Others

பயணியர் நிழற்குடை ஒப்பந்தத்தில் விடப்பட்டுஉள்ளதா..?

தேனி பங்களாமேட்டில் மதுரை சாலையில் இடதுபுறம் புதியதாக பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டு இதுவரை பயன்பாட்டிற்கு வராத நிலையில் இந்த நிழற்குடையில் சமூகவிரோதிகள் படுத்து உறங்கவும், இந்த நிழற்குடையை மறைத்து லாரிகளை நிறுத்தி வைக்கவும், போதாத குறைக்கு இந்த நிழற்குடையில் மீன்கள் வியாபாரம் நடக்கிறது.. இந்த பயணியர் நிழற்குடை பயணியர் நின்று செல்லவா ? அல்லது லாரிகளை நிறுத்தி வைக்கவா ? இல்லை மீன்கள் விற்பனை செய்யும் விற்பனை கூடமா ? என இப் பகுதி மக்கள் கேள்வி கேட்கின்றனர்…… இவற்றை உடனடியாக நகராட்சி நிர்வாகமும், தேனி மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுப்பார்களா ? அல்லது கைகட்டி , வாய்பொத்தி வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பார்களா? என்று இப் பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்……………….. தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி

Related Articles

Back to top button
Close
Close