fbpx
Others

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அசோசியேஷன்சிலம்பாட்ட போட்டி

தமிழ்நாடு சிலம்பம் கமிட்டி சென்னை மாவட்ட நிர்வாகம் மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சிலம்பம் அசோசியேஷன் சார்பில் சிலம்பாட்ட போட்டி சென்னைகொடு ங்கையூர் கண்ணதாசன் நகர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி நடைபெற்றது.கொடுங்கையூர் காவல் உதவி ஆய்வாளர். முரளி சங்கர் சிலம்பப் போட்டியை தொடங்கி வைத்தார் .இந்த போட்டியில் 300க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்குகாவல் ஆய்வாளர். சரவணன் சான்றிதழ் பதக்கங்களை அளித்து பாராட்டினார்.நிகழ்ச்சியில் தேசிய சிலம்ப துணை தலைவர் ஆர். முருகக்கனி இணை செயலாளர் எம்.ராஜா மாநில தலைவர் பாலமுருகன் திருவள்ளூர் மாவட்ட தலைவர் எஸ். ராஜா. பொருளாளர் பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.சென்னை மாவட்ட செயலாளர். கார்த்திக் மற்றும் சிலம்ப மாஸ்டர்கள் ஜெகதீசன். பிரபாகரன். ஆதிகேசவன்.. காயத்ரி. தேவதர்ஷினி. பாவனா ஆகியோர் போட்டிக்கான ஏற்பாட்டை செய்தனர்.போலீஸ் பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ் கிளப் நிர்வாகிகள் அருள்மணி மற்றும் யோகநாதன் போட்டி சிறப்பாக நடைபெற முழு ஒத்துழைப்பு அளித்தனர் .இந்த போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள் நவம்பர் மாதம் கோயம்புத்தூரில் நடக்க இருக்கின்ற மாநில போட்டியில் கலந்து கொள்வார்கள் என மாவட்ட செயலாளர் கார்த்திக் தெரிவித்தார்

Related Articles

Back to top button
Close
Close