நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடியில் பரபரப்பு …. ஏராளமான காவலர்கள் குவிப்பு…
.நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி பேரூராட்சிக்குட்பட்டநம்பித்தலைவன்பட்டயம் பேருந்து நிலையத்தின் அருகே கடந்த 93 ஆம் ஆண்டு( 30 ஆண்டு கள் ) முதல் தேவர் சிலை இருந்து வந்தது. தற்போது பழுதடைந்த பழைய பேரூந்து நிலையத்தை அகற்றிவிட்டு புதிய பேரூந்து நிலையம் MP நிதியில் இருந்து கட்டப்பட்டது. அப்போது அதன் அருகே இருந்த தேவர் சிலையும் எடுத்துவிட்டு பின்பு வைக்கலாம் என்று வைத்துள்ளனர். தற்போது புதிய பேரூந்து நிலையம் கட்டப்பட்டு நடைமுறைக்கு வந்த நிலையில் மீண்டும் தேவர் சிலையை பழைய இடத்தில் வைத்துள்ளனர். இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறை அதற்கு ஆட்சேபணை தெரிவித்துள்ளது, அதாவது பத்து நாட்களில் சிலையை அகற்றுமாறு நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.இதனைஅறிந்த அப்பகுதி பொதுமக்கள் பெண்கள்,ஆண்கள் உட்படசுமார் 500 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அங்கு பரபரப்பு காணப்பட்டது .இதை அறிந்த வருவாய் துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர் முதல் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக தெரிகிறது. மேலும் கூடியிருந்த பொதுமக்கள் யாரும் சமரசத்திற்கு உட்படாமல் கலைந்து செல்லாமல் அங்கேயே உட்கார்ந்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.