fbpx
ChennaiRETamil NewsTrending Nowஅரசியல்தமிழ்நாடு

15 நாட்கள்…! கொரோனா தொற்றால் எம்ஜிஆர் நகர் மார்க்கெட் மூடல்!

Chennai MGR market closed

சென்னை:

எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட் சாலையில் 15 நாட்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை எம்.ஜி.ஆர் நகரில் கொரோனா தொற்று பரவி வருகிறது. அதனால் மார்க்கெட் உட்பட அந்த சாலையில் உள்ள அனைத்து கடைகளுக்கும் விதிமுறைகளை கடைப்பிடித்து வியாபாரம் செய்யுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி அனுமதியளித்தனர்.

ஆனால் பொதுமக்கள் யாரும் இடைவெளி கடைப்பிடிக்காமல் கூட்டம் கூட்டமாக வந்துகொண்டிருந்தனர். அதனால் அப்பகுதியில்  கொரோனா வேகமாகப் பரவ வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந் நிலையில் இன்று முதல் அப்பகுதியில் உள்ள அனைத்துக் கடைகளையும் உடனே இழுத்து மூடுமாறு அதிகாரிகள் அறிவித்தனர். எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட் சாலையை இரும்பு தகரம் அடித்து முழுவதுமாக அடைத்தனர்.

இன்றிலிருந்து 15 நாட்கள் இந்தச் சாலையில் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது. 15 நாட்களுக்கு கடைகள் திறக்கவும் அனுமதி இல்லை. ஆகவே அப்பகுதியே வெறிச்சோடி காணப்படுகிறது.

Tags

Related Articles

Back to top button
Close
Close