நீலகிரி பாராளுமன்ற பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம்.
.நீலகிரி பாராளுமன்ற பொறுப்பாளர்கள், அவிநாசி சட்டமன்ற பொறுப்பாளர்கள், மேட்டுப்பாளையம் சட்டமன்ற பொறுப்பாளர்கள், அறிமுக கூட்டமானது கருவலூர் ரத்தினமூர்த்தி மஹாலில் நீலகிரி பாராளுமன்ற பொறுப்பாளர் நந்தகுமார், அமைப்பாளர் முருகேசன், இணை அமைப்பாளர்கள் கதிர்வேலன்,மோகன்ராஜ், ஆகியோரது முன்னிலையில் கோவை வடக்கு மாவட்ட பொதுச் செயலாளர் நந்தகுமார் வரவேற்புரையுடன், கோவை வடக்கு மாவட்ட தலைவர் சங்கீதா கௌதமன் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது சம்பந்தமாகவும், மாநிலத் தலைமையின் அறிவுறுத்தல் படி எட்டு பணிகளுக்கான மாவட்ட மண்டல வார்டு வாரியாக நிர்வாகிகள் நியமித்து பணிகள் மேற்கொள்வது என்பதைப் பற்றியும் அறிவுறுத்தப்பட்டது. இக்கூட்டத்திற்கு மேட்டுப்பாளையம் சட்டமன்ற அமைப்பாளர் முன்னாள் நகராட்சி தலைவர் சதீஷ்குமார், அவிநாசி சட்டமன்ற பொறுப்பாளர் ஜெகநாதன், அவிநாசி சட்டமன்ற இணை அமைப்பாளர் சண்முகம், மற்றும் மண்டல தலைவர்கள் தினேஷ்குமார், ஜெயபிரகாஷ், கருணா மூர்த்தி, ஜெகதீஸ்வரன் உட்பட மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள், அணி, பிரிவு நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.