நீடாமங்கலம் வர்த்தக சங்கம் சார்பில்—போலீஸ் அறிவிப்பு
இன்று 13/10/22 காவல் துறை ஆய்வாளர் அவர்களை நீடாமங்கலம் வர்த்தகர் சங்கம் சார்பில் சந்தித்து தீபாவளி நேரத்தில் கூட்ட நெரிசலையும் திருட்டுகளையும் தவிர்க்க காவல்துறை அலுவலகத்தில் கடைத்தெருவில் உள்ள கேமராக்கள் அனைத்தையும் சரி செய்ய வேண்டும் என்றும் கடைத்தெரு முழுவதும் கேமராவை பார்த்து மைக் அனௌன்ஸ்மென்ட் மூலம் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று வர்த்தக சங்க தலைவர் pgr ராஜாராமன் மற்றும் நிர்வாகிகள் வேண்டுகோள் வைத்தனர் ஒயர்கள் அனைத்தும் பழுதடைந்து அறுந்து உள்ளது, அதனை வர்த்தகர் சங்கம் மூலமாக புது ஒயராக மாற்றி தாருங்கள் என்று காவல்துறை அதிகாரிகளின் வேண்டுகோளை ஏற்று கொள்வதாகவும் நாளை மற்ற நிர்வாகிகளை கலந்து கொண்டு வாங்கி தருவதாக வர்த்தக சங்க தலைவர் ராஜாராமன் அவர்கள் அறிவித்தார்கள். அதன் அடிப்படையில் தீபாவளியை முன்னிட்டு உடனடியாக நாளை கேமராக்கள் புதுப்பிக்க படும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.