நீடாமங்கலம் வட்டம், ஒளிமதி ஊராட்சி–அறிவியல் திருவிழா நிகழ்ச்சி…
நீடாமங்கலம் வட்டம், ஒளிமதி ஊராட்சி,கப்பலுடையானில், ஆயிரமாயிரம் அறிவியல் திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.. நிகழ்ச்சிக்கு ஒளிமதி ஊ.ம. தலைவி ஜா.ரிஸ்வானாபர்வீன் அவர்கள் தலைமை தாங்கினார். ஊ.ஒ.ந.நி.பள்ளி கப்பலுடையான் தலைமை ஆசிரியை பா.உமையாள், பட்டதாரி ஆசிரியை ரா.ஷைலஜா, இடைநிலை ஆசிரியர்கள் திருமதி. கா.கலைசெல்வி,திரு.ச.ஞானசேகரன்மற்றும் ஊ.ம உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.அறிவியல் பட்டதாரி ஆசிரியை திருமதி.கி.சித்ரா அனைவரையும் வரவேற்று பேசினார்.. அறிவியல் மன்றத்தின் சிறப்பு பயிற்சியாளர்கள் தி.ராகுல் ,மற்றும் ஜெ.பிரியா இருவரால் எளிய பரிசோதனைகள் சிறப்பாக செய்து காட்டப்பட்டது.. ஆயிரமாயிரம் அறிவியல் திருவிழா மாணவர்களின் பங்கேற்புடனும் , ஈடுபாட்டுடன் , மகிழ்வான சூழலில் இனிதாக நடைப்பெற்றது..அதுசமயம்கப்பலுடையான் கிராமத்தில் உள்ள 5முதல் 14வயதுக்குட்பட்ட அனைத்து மாணவர் களையும் அரசு பள்ளியில் சேர்க்க வேண்டி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. விழாவின் நிறைவில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் ப.சுசித்ரா நன்றியுரை ஆற்றினார்