fbpx
Others

நீடாமங்கலம்-ரவுடி சடலத்தின் முன்பு நின்று சபதமேற்ற கூட்டாளிகள்…..?

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் நடேசன் தமிழார்வன் கடந்தாண்டு கொலை செய்யப்பட்டார்.இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பூவனூர் ராஜ்குமார், இரண்டு தினங்களுக்கு முன்பு திருவாரூர் அருகே வைத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பான விசாரணையில் தமிழார்வன் மகன் ஸ்டாலின் பாரதி, பழிதீர்ப்பதற்காக கூலிப்படையை ஏவி கொன்றது தெரியவந்தது.ஸ்டாலின் பாரதி  உட்பட 6 பேர் ரவுடி

 பூவனூர் ராஜ்குமாரின் கொலை வழக்கில்கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், பூவனூர் ராஜ்குமார் உடல் தகனத்தின் போது, அவரது கூட்டாளிகள் ராஜ்குமாரின் சடலத்தின் முன் நின்று ஸ்டாலின் பாரதியை கொலை செய்வோம் எனசபதமிட்டனர் .இந்தக் காட்சிகள் செல்போன் வழியாக பகிரப்பட்ட நிலையில், இதனை பார்த்த நீடாமங்கலம் பகுதி மக்கள், பழிவாங்கும் படலம் நீளுமோ என அச்சம் அடைந்துள்ளனர்..

Related Articles

Back to top button
Close
Close